ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இன்று (18) நள்ளிரவு வெளியாகவுள்ளது.

இதன்படி அக்டோபர் மாதம் 7ஆம் திகதி வேட்புமனு கோரப்படவுள்ளது.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை ஜனநாயக குடியரசின் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a comment