எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இடை நிறுத்தப்பட்டிருந்த எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

Leave a comment