இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி பகல் – இரவு ஆட்டமாக இன்று இடம்பெற இருந்தது.
எனினும் மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இறுதியாக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு 10 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
அதன்போது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் காரணமாக அதன்பின்னர் எந்தவொரு நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இலங்கை அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள்10 பேர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.