ஜனாதிபதியா, மாகாணமா, நாடாளுமன்றமா?

இலங்கை மக்கள் அனைவரின் மனதிலும் இப்போது இருப்பது ஒரு கேள்வி தான்.

தேர்தலை எப்போ சார் வைப்பீங்க? என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த தேர்தலை வைக்கிறதுன்னே குழம்பிப் போயிருக்கு நம்ம தேர்தல் ஆணைக்குழு.

அரச தரப்பில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தல் நடக்கப் போகுதா என்ன என்பது போல அமைதி காத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பொதுஜன பெரமுனவும் மக்கள் விடுதலை முன்னணியும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

தீர்மானம் ஜனாதிபதியின் கைகளில் தான் இருக்கிறது. ஜனாதிபதி மனது வைத்தால் எதுவும் நடக்கலாம்…

Leave a comment